இந்த 3 குணங்களைக் கொண்ட பெண்கள் வாழும் வீடு, எப்போதும் பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டுதான் இருக்கும்.

ஒரு வீடு சந்தோஷம் நிறைந்த வீடாக இருப்பதற்கு காரணமும் பெண்கள் தான். அதே வீடு சந்தோஷத்தை இழந்து, மன நிம்மதியை இழந்து பிரச்சனையில் சிக்கித் தப்பிப்பதற்கு காரணமும் பெண்கள் தான். இதை யாராலும் இல்லை என்று மறுத்து கூறவே முடியாது. ஒரு வீடு முழுக்க முழுக்க பிரச்சனையில் இருப்பதற்கு, பெண்களுடைய இந்த 3 குணங்களும் முழுமுதல் காரணமாக இருக்கும். இதை யார் மனதையும் புண்படுத்துவதற்காக சொல்லவில்லை.

women

இந்தப் பதிவைப் படிக்கும் பெண்களிடத்தில் இந்த குணம் இருந்தால் அதை நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும். முதல் தவறு. சில பெண்கள் எப்போதுமே, அடுத்த பெண்களை பார்த்து குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். சில பேர் குறை கூறுவதையும் தாண்டி எல்லையை மீறி, தனக்குப் பிடிக்காத அந்த குறிப்பிட்ட பெண்ணினை, அனாவசியமான வார்த்தைகளை கொண்டு திட்டும் பழக்கத்தையும் வைத்திருப்பார்கள். சில பேர் சாபம் கூட கொடுப்பார்கள்.

ஒரு பெண்ணாக இருந்து, மற்றொரு பெண்ணை பற்றி தரைக்குறைவாக பேசி, அவர்களை வாழவிடாமல் செய்து, இழிவு படுத்தவே கூடாது. உங்களுக்கு கெடுதல் செய்த பெண்ணாக இருந்தாலும் சரி, அந்தப் பெண்ணைப் பற்றி ஒரு வார்த்தை கூட உங்களது வாயால் நீங்கள் இழிவாக பேசக்கூடாது. ‘ஒரு பெண்ணாக இருக்கும் நீங்கள், அடுத்த பெண்ணினுடைய வாழ்க்கை கெட்டுப் போவதற்கான சதித்திட்டத்தில் ஈடுபடவே கூடாது’.

women1

இரண்டாவது குணம். பெண்களுக்கு எவ்வளவு தான் அறிவாற்றல் திறமை இருந்தாலும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று வீட்டில், தன்னுடைய குடும்பத்தில் நடந்து கொள்ளவே கூடாது. குறிப்பாக கணவரிடம். எல்லாம் தெரிந்தே இருந்தாலும், தனக்கு தெரியாதது போல அடக்கமாக இருக்கும் பெண்களே வாழ்க்கையில் இன்று உயர்ந்த நிலையில் உள்ளார்கள். அவர்களுடைய குடும்பமும் உயர்ந்த நிலைமையில் இருக்கும். அலுவலகத்தில் பத்து பேரை அடக்கி ஆளும் பெண்ணாக இருந்தாலும், வீட்டில் அந்தப் பெண் கணவனுக்கு மனைவி ஸ்தானத்தில் தான் இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, பெண்கள் எப்போதுமே அடுத்தவர்களுடைய பாராட்டை பெற வேண்டும் என்பதற்காக எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. இதற்காக பெண்கள் பாராட்டு வாங்குவதற்கு நல்ல விஷயங்களை செய்யக்கூடாது என்று சொல்ல வரவில்லை. அதாவது நடிப்பது என்று சொல்லுவார்கள் அல்லவா.

women-1

நம்முடைய கணவர் இன்று வேலைக்கு செய்யவில்லை வீட்டிலேயே இருக்கின்றார். அதனால் இன்று நாம் வேலை செய்வது போல நடக்க வேண்டும். அவருடைய பாராட்டையும் பெற வேண்டும் என்பதற்காகவே சில பேர் வீட்டில் பொய்யாக நடந்து கொள்வார். சில கூட்டுக் குடும்பங்களில் இன்றளவும் இந்த பிரச்சனை நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

women1

கணவன் இருக்கும்போது மனைவி, மாமனார் மாமியாரிடம் ஒரு பொய்யான வேடத்தை காண்பிப்பதும், கணவர் வெளியே சென்ற பின்பு தன்னுடைய குணத்தை மாற்றிக் கொள்வதும் தவறான ஒரு விஷயம். இதேபோல் அந்த வீட்டில் இருக்கும், மாமியார் தன் மகன் இருக்கும் போது, மருமகளிடம் ஒரு ஒரு பொய்யான வேடத்தை காண்பிப்பதும் தவறான ஒன்று‌. இப்படி பொய்யாக அடுத்தவர்களுடைய அன்பை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இல்லத்திலும் சந்தோஷம் நிலைத்திருக்காது. உறவுகளில் பலம் இருக்காது. மனநிம்மதியும் இருக்காது.

The post இந்த 3 குணங்களைக் கொண்ட பெண்கள் வாழும் வீடு, எப்போதும் பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டுதான் இருக்கும். appeared first on Dheivegam.



from Dheivegam https://ift.tt/3wkxGMV

ஒரு வீடு சந்தோஷம் நிறைந்த வீடாக இருப்பதற்கு காரணமும் பெண்கள் தான். அதே வீடு சந்தோஷத்தை இழந்து, மன நிம்மதியை இழந்து பிரச்சனையில் சிக்கித் தப்பிப்பதற்கு காரணமும் பெண்கள் தான். இதை யாராலும் இல்லை என்று மறுத்து கூறவே முடியாது. ஒரு வீடு முழுக்க முழுக்க பிரச்சனையில் இருப்பதற்கு, பெண்களுடைய இந்த 3 குணங்களும் முழுமுதல் காரணமாக இருக்கும். இதை யார் மனதையும் புண்படுத்துவதற்காக சொல்லவில்லை.

women

இந்தப் பதிவைப் படிக்கும் பெண்களிடத்தில் இந்த குணம் இருந்தால் அதை நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்கும். முதல் தவறு. சில பெண்கள் எப்போதுமே, அடுத்த பெண்களை பார்த்து குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். சில பேர் குறை கூறுவதையும் தாண்டி எல்லையை மீறி, தனக்குப் பிடிக்காத அந்த குறிப்பிட்ட பெண்ணினை, அனாவசியமான வார்த்தைகளை கொண்டு திட்டும் பழக்கத்தையும் வைத்திருப்பார்கள். சில பேர் சாபம் கூட கொடுப்பார்கள்.

ஒரு பெண்ணாக இருந்து, மற்றொரு பெண்ணை பற்றி தரைக்குறைவாக பேசி, அவர்களை வாழவிடாமல் செய்து, இழிவு படுத்தவே கூடாது. உங்களுக்கு கெடுதல் செய்த பெண்ணாக இருந்தாலும் சரி, அந்தப் பெண்ணைப் பற்றி ஒரு வார்த்தை கூட உங்களது வாயால் நீங்கள் இழிவாக பேசக்கூடாது. ‘ஒரு பெண்ணாக இருக்கும் நீங்கள், அடுத்த பெண்ணினுடைய வாழ்க்கை கெட்டுப் போவதற்கான சதித்திட்டத்தில் ஈடுபடவே கூடாது’.

women1

இரண்டாவது குணம். பெண்களுக்கு எவ்வளவு தான் அறிவாற்றல் திறமை இருந்தாலும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று வீட்டில், தன்னுடைய குடும்பத்தில் நடந்து கொள்ளவே கூடாது. குறிப்பாக கணவரிடம். எல்லாம் தெரிந்தே இருந்தாலும், தனக்கு தெரியாதது போல அடக்கமாக இருக்கும் பெண்களே வாழ்க்கையில் இன்று உயர்ந்த நிலையில் உள்ளார்கள். அவர்களுடைய குடும்பமும் உயர்ந்த நிலைமையில் இருக்கும். அலுவலகத்தில் பத்து பேரை அடக்கி ஆளும் பெண்ணாக இருந்தாலும், வீட்டில் அந்தப் பெண் கணவனுக்கு மனைவி ஸ்தானத்தில் தான் இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, பெண்கள் எப்போதுமே அடுத்தவர்களுடைய பாராட்டை பெற வேண்டும் என்பதற்காக எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. இதற்காக பெண்கள் பாராட்டு வாங்குவதற்கு நல்ல விஷயங்களை செய்யக்கூடாது என்று சொல்ல வரவில்லை. அதாவது நடிப்பது என்று சொல்லுவார்கள் அல்லவா.

women-1

நம்முடைய கணவர் இன்று வேலைக்கு செய்யவில்லை வீட்டிலேயே இருக்கின்றார். அதனால் இன்று நாம் வேலை செய்வது போல நடக்க வேண்டும். அவருடைய பாராட்டையும் பெற வேண்டும் என்பதற்காகவே சில பேர் வீட்டில் பொய்யாக நடந்து கொள்வார். சில கூட்டுக் குடும்பங்களில் இன்றளவும் இந்த பிரச்சனை நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

women1

கணவன் இருக்கும்போது மனைவி, மாமனார் மாமியாரிடம் ஒரு பொய்யான வேடத்தை காண்பிப்பதும், கணவர் வெளியே சென்ற பின்பு தன்னுடைய குணத்தை மாற்றிக் கொள்வதும் தவறான ஒரு விஷயம். இதேபோல் அந்த வீட்டில் இருக்கும், மாமியார் தன் மகன் இருக்கும் போது, மருமகளிடம் ஒரு ஒரு பொய்யான வேடத்தை காண்பிப்பதும் தவறான ஒன்று‌. இப்படி பொய்யாக அடுத்தவர்களுடைய அன்பை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இல்லத்திலும் சந்தோஷம் நிலைத்திருக்காது. உறவுகளில் பலம் இருக்காது. மனநிம்மதியும் இருக்காது.

The post இந்த 3 குணங்களைக் கொண்ட பெண்கள் வாழும் வீடு, எப்போதும் பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டுதான் இருக்கும். appeared first on Dheivegam.

https://ift.tt/3pQhjoP
via IFTTT

No comments:

Post a Comment