இந்த வெள்ளிக்கிழமை, உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருளையும் வைத்து பூஜை செய்யுங்கள்! அடுத்த வெள்ளிக் கிழமைக்குள் நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

வெள்ளிக்கிழமை என்றாலே அது மகாலக்ஷ்மிக்கு உகந்த நாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். வெள்ளிக்கிழமையில் மகாலக்ஷ்மியை மனதார நாம் நினைத்து வழிபடும்போது நம் வீட்டில் லட்சுமி கடாட்ச்சியத்தை நிரந்தரமாக நம்மால் தங்க வைத்துக் கொள்ள முடியும். அதாவது, மகாலக்ஷ்மியை நம் வசப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் கூறலாம். நம் வீட்டில் மகாலக்ஷ்மி நிரந்தரமாகத் தங்கிவிட்டால், கட்டாயம் நம் வீடு சுபிட்சம் அடையும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு சுலபமான முறையில் எப்படி வழிபாடு செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalakshmi

வெள்ளிக்கிழமை என்றாலே பொதுவாக எல்லோருடைய வீடும் சுத்தபத்தமாக தான் இருக்கும். ஆகவே, உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்து விட்டு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் இந்த மூன்றையும் மகாலக்ஷ்மி தாயாரின் முன்பு வைக்கவேண்டும். இப்போது உங்கள் மனதில் தோன்றும்! இது நமக்கு தெரிந்த விஷயம் தானே! என்று. நமக்கு தெரிந்த விஷயம் தான். இந்த மூன்று பொருட்களோடு சேர்த்து, மகாலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்த, மகாலக்ஷ்மியை நம் வசப்படுத்திக் கொள்ளக்கூடிய இன்னும் 3 பொருட்களையும் இதன் மேல் நாம் வைக்க வேண்டும்.

இந்த மூன்று பொருட்களும் நாம் அறிந்ததுதான். இருப்பினும், இந்த குறிப்பிட்ட மூன்று பொருளும் வெற்றிலைபாக்கு பழத்தோடு சேரும்போது, நாம் நினைக்கும் வேண்டுதலை கூடிய விரைவில் நிறைவேற்றிக் கொடுக்கும் சக்தியானது அதிகப்படுத்துகிறது. அவ்வளவுதான். 3 ஏலக்காய், 3 கிராம்பு, ஒரு சிறிய துண்டு வசம்பு.

thambulam

மூன்று வெற்றிலை வையுங்கள். அதன் மேல் இரண்டு கொட்டைப்பாக்கு வையுங்கள். அதில் மூன்று ஏலக்காய் வையுங்கள். மூன்று கிராம்பு, ஒரு சிறிய துண்டு வசம்பு வைத்து விட்டு, அதன் மேல் இரண்டு வாழைப்பழங்களை வைத்து, அதன் மேல் கொஞ்சம் மல்லிகை பூவை வைத்து, மகாலக்ஷ்மியின் முன்பு படைத்து உங்களுடைய பண சம்பந்தப்பட்ட பிரச்சனை எதுவாக இருந்தாலும் அந்தக் கோரிக்கையை வைக்க வேண்டும். பணம் சம்பந்தம் இல்லாத வேறு ஏதேனும் மங்கள கரமான காரியம் நிறைவேற வேண்டும் என்றாலும், அந்த கோரிக்கையை வைத்துக் கொள்ளலாம்.

மனதார இரு கை கூப்பி, இரு கையேந்தி மகாலக்ஷ்மியிடம் வரத்தை கேளுங்கள். தினந்தோறும் கிராம்பு, வசம்பு, ஏலக்காய் இந்த மூன்று பொருட்களையும், மாற்றவேண்டிய அவசியமில்லை. வெற்றிலை, பாக்கு, பூ, பழம் இவைகளை மட்டும் தினம்தோறும் புதிதாக வையுங்கள். இந்த வெள்ளிக்கிழமையிலிருந்து, அடுத்த வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து இந்த பூஜையை மகாலக்ஷ்மியை நினைத்து செய்து வாருங்கள்.

காலை 6 மணிக்கு தீபம் ஏற்றி மகாலக்ஷ்மியின் முன்பு பூஜை செய்ய வேண்டும். வழக்கம் போல ஒரே ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மகாலக்ஷ்மிக்கு வாசனை பூக்களை போட்டு விட்டு, முடிந்தால் மல்லிகைப்பூ போடுங்கள். தாமரைப்பூ கிடைத்தால் இன்னும் சிறப்பு. இல்லை என்றால், கிடைக்கும் பூவை தினம்தோறும் புதியதாக மாற்றி, மனதார இந்த பூஜையை செய்து பாருங்கள்! பண சம்பந்தப்பட்ட எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், மனம் சம்பந்தப்பட்ட எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், அதற்கான தீர்வு உங்களுக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு துளி கூட மனதில் ‘இந்தக் கோரிக்கை நிறைவேறுமா என்ற சந்தேகம்’ இல்லாமல் முழு நிறைவோடு செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் பிறந்த தேதிக்கு ஏற்ப, எந்த நிற பூவைச் சூடிக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்? குறிப்பிட்ட சில தேதியில் பிறந்த பெண்கள், தலை சம்மந்தமாக சில தவறுகளை மட்டும் செய்யவே கூடாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mahalakshmi Valipadu in Tamil. Friday pooja at home in Tamil. Mahalakshmi. Mahalakshmi Vasam Seiyum Porutkal

The post இந்த வெள்ளிக்கிழமை, உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருளையும் வைத்து பூஜை செய்யுங்கள்! அடுத்த வெள்ளிக் கிழமைக்குள் நீங்கள் நினைத்தது நிறைவேறும். appeared first on Dheivegam.



from Dheivegam https://ift.tt/3doETm3

வெள்ளிக்கிழமை என்றாலே அது மகாலக்ஷ்மிக்கு உகந்த நாள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். வெள்ளிக்கிழமையில் மகாலக்ஷ்மியை மனதார நாம் நினைத்து வழிபடும்போது நம் வீட்டில் லட்சுமி கடாட்ச்சியத்தை நிரந்தரமாக நம்மால் தங்க வைத்துக் கொள்ள முடியும். அதாவது, மகாலக்ஷ்மியை நம் வசப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் கூறலாம். நம் வீட்டில் மகாலக்ஷ்மி நிரந்தரமாகத் தங்கிவிட்டால், கட்டாயம் நம் வீடு சுபிட்சம் அடையும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு சுலபமான முறையில் எப்படி வழிபாடு செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalakshmi

வெள்ளிக்கிழமை என்றாலே பொதுவாக எல்லோருடைய வீடும் சுத்தபத்தமாக தான் இருக்கும். ஆகவே, உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்து விட்டு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் இந்த மூன்றையும் மகாலக்ஷ்மி தாயாரின் முன்பு வைக்கவேண்டும். இப்போது உங்கள் மனதில் தோன்றும்! இது நமக்கு தெரிந்த விஷயம் தானே! என்று. நமக்கு தெரிந்த விஷயம் தான். இந்த மூன்று பொருட்களோடு சேர்த்து, மகாலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்த, மகாலக்ஷ்மியை நம் வசப்படுத்திக் கொள்ளக்கூடிய இன்னும் 3 பொருட்களையும் இதன் மேல் நாம் வைக்க வேண்டும்.

இந்த மூன்று பொருட்களும் நாம் அறிந்ததுதான். இருப்பினும், இந்த குறிப்பிட்ட மூன்று பொருளும் வெற்றிலைபாக்கு பழத்தோடு சேரும்போது, நாம் நினைக்கும் வேண்டுதலை கூடிய விரைவில் நிறைவேற்றிக் கொடுக்கும் சக்தியானது அதிகப்படுத்துகிறது. அவ்வளவுதான். 3 ஏலக்காய், 3 கிராம்பு, ஒரு சிறிய துண்டு வசம்பு.

thambulam

மூன்று வெற்றிலை வையுங்கள். அதன் மேல் இரண்டு கொட்டைப்பாக்கு வையுங்கள். அதில் மூன்று ஏலக்காய் வையுங்கள். மூன்று கிராம்பு, ஒரு சிறிய துண்டு வசம்பு வைத்து விட்டு, அதன் மேல் இரண்டு வாழைப்பழங்களை வைத்து, அதன் மேல் கொஞ்சம் மல்லிகை பூவை வைத்து, மகாலக்ஷ்மியின் முன்பு படைத்து உங்களுடைய பண சம்பந்தப்பட்ட பிரச்சனை எதுவாக இருந்தாலும் அந்தக் கோரிக்கையை வைக்க வேண்டும். பணம் சம்பந்தம் இல்லாத வேறு ஏதேனும் மங்கள கரமான காரியம் நிறைவேற வேண்டும் என்றாலும், அந்த கோரிக்கையை வைத்துக் கொள்ளலாம்.

மனதார இரு கை கூப்பி, இரு கையேந்தி மகாலக்ஷ்மியிடம் வரத்தை கேளுங்கள். தினந்தோறும் கிராம்பு, வசம்பு, ஏலக்காய் இந்த மூன்று பொருட்களையும், மாற்றவேண்டிய அவசியமில்லை. வெற்றிலை, பாக்கு, பூ, பழம் இவைகளை மட்டும் தினம்தோறும் புதிதாக வையுங்கள். இந்த வெள்ளிக்கிழமையிலிருந்து, அடுத்த வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து இந்த பூஜையை மகாலக்ஷ்மியை நினைத்து செய்து வாருங்கள்.

காலை 6 மணிக்கு தீபம் ஏற்றி மகாலக்ஷ்மியின் முன்பு பூஜை செய்ய வேண்டும். வழக்கம் போல ஒரே ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மகாலக்ஷ்மிக்கு வாசனை பூக்களை போட்டு விட்டு, முடிந்தால் மல்லிகைப்பூ போடுங்கள். தாமரைப்பூ கிடைத்தால் இன்னும் சிறப்பு. இல்லை என்றால், கிடைக்கும் பூவை தினம்தோறும் புதியதாக மாற்றி, மனதார இந்த பூஜையை செய்து பாருங்கள்! பண சம்பந்தப்பட்ட எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், மனம் சம்பந்தப்பட்ட எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், அதற்கான தீர்வு உங்களுக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு துளி கூட மனதில் ‘இந்தக் கோரிக்கை நிறைவேறுமா என்ற சந்தேகம்’ இல்லாமல் முழு நிறைவோடு செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் பிறந்த தேதிக்கு ஏற்ப, எந்த நிற பூவைச் சூடிக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்? குறிப்பிட்ட சில தேதியில் பிறந்த பெண்கள், தலை சம்மந்தமாக சில தவறுகளை மட்டும் செய்யவே கூடாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mahalakshmi Valipadu in Tamil. Friday pooja at home in Tamil. Mahalakshmi. Mahalakshmi Vasam Seiyum Porutkal

The post இந்த வெள்ளிக்கிழமை, உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருளையும் வைத்து பூஜை செய்யுங்கள்! அடுத்த வெள்ளிக் கிழமைக்குள் நீங்கள் நினைத்தது நிறைவேறும். appeared first on Dheivegam.

https://ift.tt/3eShDNx
via IFTTT

No comments:

Post a Comment