
இன்றைக்கு நாம் இருக்கக்கூடிய பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம், யோகா செய்யும் அளவிற்கு கூட நேரம் கிடையாது. பலபேர் சாப்பாடு சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல், பணம் சம்பாதிக்க இன்றளவும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மன அமைதி கிடைக்க வேண்டும் என்றாலும், வீட்டில் சந்தோஷம் நிலைத்து இருக்க வேண்டும் என்றாலும், மன அழுத்தம் குறைய வேண்டும் என்றாலும், என்ன செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எல்லா வகையான கஷ்டத்திற்கும் நிரந்தரத் தீர்வைத் தரப் போகும், இந்த மந்திரம் நான்கெழுத்து மந்திரம் தான். இந்த மந்திரத்தை நீங்கள் தினந்தோறும் உச்சரித்தால், ஒரு மணி நேரம் தியானம் செய்த பலனையோ அல்லது ஒரு மணி நேரம் யோகா செய்த பலனையோ கட்டாயம் அடைய முடியும். அந்த அளவிற்கு மன அமைதி ஏற்படுவதை கட்டாயம் உங்களால் அனுபவபூர்வமாக உணர முடியும். அதாவது நம்முடைய மன அழுத்தமானது குறைக்கப்பட்டு, ஆரோக்கியமாகவும் அந்த நாள் முழுவதும் சந்தோஷமாகவும் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினந்தோறும் காலை எழுந்தவுடன், பல் தேய்த்து விட்டு, முகம் கழுவிவிட்டு, அமைதியான ஒரு இடத்தில் சம்மணம் போட்டு, மன பலகையின் மீதோ, பாயின் மீதோ அமர்ந்து கண்களை மூடி “மவ சிவ” என்ற மந்திரத்தை உச்சரித்தாலே போதும். இந்த மந்திரத்தை, இத்தனை முறைதான் உச்சரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. கண்களை மூடி 5 நிமிடம் இதற்காக நேரத்தை ஒதுக்கி வைத்தாலே போதும்.

காலையில் மட்டும் தான் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டுமா என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்தால்? அதற்கும் பதில் உண்டு. திடீரென்று எதிர் பாராத பிரச்சனை உங்களுக்கு வந்துவிட்டதா? மனதிற்குள்ளேயே “மவ சிவ மவ சிவ” என்று சொல்லிக்கொள்ளுங்கள். திடீரென்று பணத்தேவை ஏற்படுகிறது. “மவ சிவ. பணத்தேவை பூர்த்தியாக வழி கிடைக்க வேண்டும்”. நீங்கள் நல்ல காரியத்திற்காக செல்கிறீர்கள் அந்த காரியம் வெற்றிகரமாக நடக்க வேண்டும். “மவ சிவ. செல்லும் காரியம் வெற்றியாக நடக்க வேண்டும்.”
இப்படியாக உங்கள் மனதிற்குள் இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. சரி. சில பேருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கும்! சிலர் எந்த மந்திரத்தை உச்சரித்தாலும், அதற்கான பலனை அவர்களால் பெறவே முடியாது. நம்பிக்கையோடு உச்சரிக்கப்படும் மந்திரம் பலனளிக்கவில்லை என்றால், அந்த வீட்டில் கட்டாயம் துர்தேவதைகளின் ஆதிக்கமும், கண்ணுக்கு தெரியாத கெட்ட நடமாட்டம் இருக்கின்றது என்றே கூறலாம்.

துர்தேவதைகள் என்றால் உடனே பேய் பிசாசு என்று பயந்துவிட வேண்டாம். சோம்பல், இயலாமை, கண் திருஷ்டி, மூதேவி இவை அனைத்துமே துர்தேவதைகளின் வடிவம் தான். கொஞ்சம் பசுமாட்டு கோமியத்தை கொண்டு வந்து உங்கள் வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். இல்லை சாம்பிராணி தூபம் போடும் போது, அதில் சிறிதளவு 4 வெண் கடுகு போட்டு வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போடுங்கள். இப்படி செய்யும் பட்சத்தில் நீங்கள் உச்சரிக்கும் மந்திரம் உங்களுக்கு முழுமையான பலனைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே
எதிர்பாராமல் ஏற்பட்ட தடைகளையும், சுலபமாக தகர்த்தெறியும் மந்திரம்! இன்றைய சூழ்நிலைக்கு இது அவசியம் தேவை.
இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.
English Overview:
Here we have Sivan manthiram. Sivan manthiram Tamil. Sivan manthirangal Tamil. Sivan slogam.
The post தொட்டதெல்லாம் வெற்றி அடைய தினமும் சொல்ல வேண்டிய 4 எழுத்து மந்திரம்! மன அழுத்தம் காணாமலே போய்விடும். appeared first on Dheivegam.
from Dheivegam https://ift.tt/3eoukzs

இன்றைக்கு நாம் இருக்கக்கூடிய பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம், யோகா செய்யும் அளவிற்கு கூட நேரம் கிடையாது. பலபேர் சாப்பாடு சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல், பணம் சம்பாதிக்க இன்றளவும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மன அமைதி கிடைக்க வேண்டும் என்றாலும், வீட்டில் சந்தோஷம் நிலைத்து இருக்க வேண்டும் என்றாலும், மன அழுத்தம் குறைய வேண்டும் என்றாலும், என்ன செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எல்லா வகையான கஷ்டத்திற்கும் நிரந்தரத் தீர்வைத் தரப் போகும், இந்த மந்திரம் நான்கெழுத்து மந்திரம் தான். இந்த மந்திரத்தை நீங்கள் தினந்தோறும் உச்சரித்தால், ஒரு மணி நேரம் தியானம் செய்த பலனையோ அல்லது ஒரு மணி நேரம் யோகா செய்த பலனையோ கட்டாயம் அடைய முடியும். அந்த அளவிற்கு மன அமைதி ஏற்படுவதை கட்டாயம் உங்களால் அனுபவபூர்வமாக உணர முடியும். அதாவது நம்முடைய மன அழுத்தமானது குறைக்கப்பட்டு, ஆரோக்கியமாகவும் அந்த நாள் முழுவதும் சந்தோஷமாகவும் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினந்தோறும் காலை எழுந்தவுடன், பல் தேய்த்து விட்டு, முகம் கழுவிவிட்டு, அமைதியான ஒரு இடத்தில் சம்மணம் போட்டு, மன பலகையின் மீதோ, பாயின் மீதோ அமர்ந்து கண்களை மூடி “மவ சிவ” என்ற மந்திரத்தை உச்சரித்தாலே போதும். இந்த மந்திரத்தை, இத்தனை முறைதான் உச்சரிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. கண்களை மூடி 5 நிமிடம் இதற்காக நேரத்தை ஒதுக்கி வைத்தாலே போதும்.

காலையில் மட்டும் தான் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டுமா என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்தால்? அதற்கும் பதில் உண்டு. திடீரென்று எதிர் பாராத பிரச்சனை உங்களுக்கு வந்துவிட்டதா? மனதிற்குள்ளேயே “மவ சிவ மவ சிவ” என்று சொல்லிக்கொள்ளுங்கள். திடீரென்று பணத்தேவை ஏற்படுகிறது. “மவ சிவ. பணத்தேவை பூர்த்தியாக வழி கிடைக்க வேண்டும்”. நீங்கள் நல்ல காரியத்திற்காக செல்கிறீர்கள் அந்த காரியம் வெற்றிகரமாக நடக்க வேண்டும். “மவ சிவ. செல்லும் காரியம் வெற்றியாக நடக்க வேண்டும்.”
இப்படியாக உங்கள் மனதிற்குள் இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. சரி. சில பேருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கும்! சிலர் எந்த மந்திரத்தை உச்சரித்தாலும், அதற்கான பலனை அவர்களால் பெறவே முடியாது. நம்பிக்கையோடு உச்சரிக்கப்படும் மந்திரம் பலனளிக்கவில்லை என்றால், அந்த வீட்டில் கட்டாயம் துர்தேவதைகளின் ஆதிக்கமும், கண்ணுக்கு தெரியாத கெட்ட நடமாட்டம் இருக்கின்றது என்றே கூறலாம்.

துர்தேவதைகள் என்றால் உடனே பேய் பிசாசு என்று பயந்துவிட வேண்டாம். சோம்பல், இயலாமை, கண் திருஷ்டி, மூதேவி இவை அனைத்துமே துர்தேவதைகளின் வடிவம் தான். கொஞ்சம் பசுமாட்டு கோமியத்தை கொண்டு வந்து உங்கள் வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். இல்லை சாம்பிராணி தூபம் போடும் போது, அதில் சிறிதளவு 4 வெண் கடுகு போட்டு வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போடுங்கள். இப்படி செய்யும் பட்சத்தில் நீங்கள் உச்சரிக்கும் மந்திரம் உங்களுக்கு முழுமையான பலனைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே
எதிர்பாராமல் ஏற்பட்ட தடைகளையும், சுலபமாக தகர்த்தெறியும் மந்திரம்! இன்றைய சூழ்நிலைக்கு இது அவசியம் தேவை.
இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.
English Overview:
Here we have Sivan manthiram. Sivan manthiram Tamil. Sivan manthirangal Tamil. Sivan slogam.
The post தொட்டதெல்லாம் வெற்றி அடைய தினமும் சொல்ல வேண்டிய 4 எழுத்து மந்திரம்! மன அழுத்தம் காணாமலே போய்விடும். appeared first on Dheivegam.
https://ift.tt/2Yp6Cxvvia IFTTT
No comments:
Post a Comment